- இறப்பு நிகழந்து 24 மணித்தியாலங்களுக்குள் தோட்ட அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.
- மரணத்தை அறிவிக்க வேண்டிய நபர்கள்,
- இறந்த நபரின் உறவினர்கள்
- மரணத்தின்போது சமூகமளித்திருந்த நபர்
- இறப்பு நிகழ்ந்தபோது அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்
- தகனக் கிரியைகளின்போது ஈடுபட்ட நபர்களில் ஒருவர்
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- இறந்த நபரின் மருத்துவ சான்றிதழ் ஏதேனும் இருந்தால்
- இறந்த நபரின் சிகிச்சை நிலைய சான்றிதழ் ஏதேனும் இருந்தால்
- இறப்பு பதிவுசெய்யப்படும். அத்துடன் விண்ணப்பம் தோட்ட அதிகாரியால் சான்றுப்படுத்தப்பட்டு மாவட்ட மருத்துவ அதிகாரி ஊடாக பிரதேச செயலகத்திற்கு அனுப்பப்படும்.
- இறப்பு மாவட்ட பதிவாளரால் பதிவுசெய்யப்பட்டு மரண சான்றிதழ் தோட்ட அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
- தகவல் அளித்தவர் மரண சான்றிதழை தோட்ட அதிகாரியிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.














