2018ம் வருடத்திற்கான சமூர்த்தி உதவி பெறுனர்களுக்கான ஊக்குவிப்பு வேலைத் திட்டம்.

களுத்துறை மாவட்டத்தின் 13 பிரதேச செயலகங்களுல் பேருவளை பிரதேச செயலகம் 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன் சமூர்த்தி அடிப்படை வங்கிகள் 06 ம் நிறுவப்பட்டுள்ளது.

இப் பிரதேச செயலகப் பிரிவின் பிரதான  வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் மீன் பிடித் தொழில்ளைக் குறிப்பிடலாம்.  மேலும், சுற்றுலாத் துறையை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பங்கள் பலவும் வாழ்கின்றன.

இப்பிரதேச செயலகப் பிரிவில் சமூர்த்தி உதவி பெறுனர் குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை அன்னளவாக 8681 ஆக  இருப்பதுடன் இவ்வாண்டில் ஊக்குவிப்பு வேலைத் திட்டங்கள் மூலம் 549 சமூர்த்தி உதவி பெறுனர் குடும்பங்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளது.

இச் சமூர்த்தி உதவி பெறுனர் குடும்பங்களை ஊக்குவிப்பதற்காக ரூ.1545560/=ஐ இப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலீடாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி ஒதுக்கீட்டி லிருந்து  விவசாய வேலைத்திட்டங்களுக்காக ரூ.42000/= ஐயும், கமத் தொழில் அபி விருத்திக்காக ரூ.1503560/= ஐயும், விற்பனை வியாபார அபிவிருத்திகளுக்காக ரூ.100000/= ஐயும் ஒதுக்கீடு செய்துள்ளோம்.

அதன் கீழ் சிறு மற்றும் மத்திய தர கமத்தொழில் வர்க்கத்தினர்களுக்காகா பிடவைக் கைத்தொழிலுக்காக ஜுஹி மற்றும் ஓவ்லொக் தையல் இயந்திரங்கள் வழங்கல் வேலைத்திட்டம், தச்சு மற்றும் கொள்ளர் தொழிலில் ஈடுபடுபவர்களுக்காக தச்சு இயந்திரங்கள் மற்றும் வேறு உபகரணங்கள், விற்பனை நிலையங்களுக்கு குளிர்பான பெட்டி, தராசு மற்றும் வேறு உபகரண வகைகள் 38 வழங்கப்பட்டன.

அத்தோடு வியாபார நிலையங்களின் சங்கம் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் திரைச்சீலை தைத்தல் பயிற்ச்சிப் பாடநெறியொன்றும் நடாத்தப்பட்டதுடன் விதாதா வள நிலையத்தோடு ஒன்றிணைந்துதையல் இயந்திரம் பழுது பார்த்தல் பயிற்ச்சி  பட்டறையொன்றும் நடாத்தப்பட்டது.

அலங்கார பூ வளர்ப்பு மற்றும் தாவர வளர்ப்புகளில் ஈடுபடுவோரின் அறிவு வளர்ச்சிக்காக வெளிக்கள பயிற்ச்சி வேலைத்திட்டங்களும் அமுலாக்கல் செய்யப்பட்டன.

News & Events

18
ஜன2023
2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2026 ஓய்வூதியம் செலுத்தும் தேதி                     மாதம்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top